Profile of KiNa வாழ்க்கைக் குறிப்பு

கோவை மாவட்டம் கொடுவாயில் பிறந்த(24.08.1947) இவர் தன் சொந்த ஊரிலும் பொங்கலூர் உயர்நிலைப்பள்ளியிலும் பள்ளிக் கல்வியையும் கோவை பூ சா.கோ.கலைக் கல்லூரியில் குமுபுக வகுப்பையும் முடித்து அண்ணாமலைப்பல்கலைக் கழகம். கேரளப்பல்கலைக்கழகம் இவற்றில் தமிழ் உயர் கல்வி கற்றார். பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியத்தின் கேரளத் தமிழ்ப்பட்டறையில் உருவான பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் மேற்பார்வையில் கோவை மாவட்ட இடப்பெயர்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றபின்(1973) கேரளப் பல்கலைக் கழகத்தமிழ்த்துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.பின் படிப்படியாக உயர்ந்து அத்துறையின் தலைவராகவும் புலத்துறைத் தலைவராகவும் அமர்ந்திருந்தபின்
2007இல் தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக அழைப்பை ஏற்று அங்கு தமிழ்ப் பேராசிரியராகச் சேர்ந்து 2007 முதல் 2013 வரை பணியாற்றியபின் திருவாரூரில் உள்ள தமிழ் நாடு மத்தியப் பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அங்கு செம்மொழித் தமிழக்கல்வியைப் புகட்டும் தமிழ்த் துறையின் ஒருங்கிணைப்பாளராக 2013 முதல் 2017 வரை பணியாற்றினார்.தற்போது புதுவையிலுள்ள பிரெஞ்சு கீழ்த்திசை ஆசியவியல் பள்ளியில் நேதமிழ் என்ற சங்க இலக்கியப் பதிப்புத் திட்டத்தின் கீழ் தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரைக்குச் செம்பதிப்புக் கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.மேலும் அங்கே சிவதருமோத்தரம் பற்றிய ஆய்வுத்திட்டத்தின் கீழ் கச்சியப்ப முனிவரின் தணிகைப் புராணத்தில் அவர் தமிழ்ச்சிவதருமோத்தர நூலின் மொழி பெயர்ப்பாக அமைத்த அகத்தியன் அருள்பெறுபடலத்தை அறிஞர்களுடன் இணைந்து மொழிபெயர்த்து வருகிறார் 2017-). முன்னதாக ஜெர்மனியிலுள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு இணையராகவும்(1979-81) போலந்திலுள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராகவும் (2005-2008) பணியாற்றியுள்ளார்.பேராசிரியர் மா.இளையபெருமாள்.முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் இவர்கள் கீழ்ப்பணியாற்றிய இவர் உற்ற நண்பர் காலஞ்சென்ற ஈழத்துக் கவிஞர் முனைவர் சி.சத்தியமூர்த்தியாவர்.இந்திய மொழியியல் கழகம்.திராவிட மொழியியல்கழகம்.இந்திய இடப்பெயர் க்கழகம்.திருவனந்தபுரம் இடப்பெயர்க்கழகம். போன்ற பல அமைப்புகளிலும் உறுப்பினரான இவரின் கீழ் 50 க்கும் மேற்பட்டோர் முன் முனைவர் பட்டமும் 25 பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.தமிழிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் 15 நூல்களையும் 150க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். இலக்கணம் மொழி வரலாறு.இடப் பெயராய்வு. அகராதியியல். ஒப்பிலக்கியம். மொழிபெயர்ப்பியல். மூலபாடத்திறனாய்வு. கல்வெட்டு .வரலாறு .பண்பாடு போன்ற கல்வித்துறைகளில் ஈடுபாடுடைய இவர் தற்காலப் படைப்பிலக்கிய முயற்சிகளிலும் அக்கறை காட்டுபவர். சாகித்திய அகாதெமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளராகப் ஐந்தாண்டுகள் பணியாற்றினார்(2013-2018).மலையாளம் போலிஷ், மொழிகளிலிருந்து இலக்கணம்.புதினம். கவிதை .சிறுகதை போன்றவற்றை மொழி பெயர்த்துள்ளார். வீரசோழியச் செம்பதிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர் இங்கிலாந்து ஜெர்மனி முதலிய ஐரோப்பிய நாடுகள் இலங்கை ,சிங்கப்பூர்,மலேசியா, அமெரிக்கா போன்ற ஆசிய நாடுகளுக்கும் கல்விப்பயணம் சென்றுவந்துள்ளார் இவர் மனைவி கிருஷ்ணவேணி.மகள்கள் கண்மணி(கன்யா).நாககிருஷ்ணாள்(நித்தியா).

About NIRLAC

Prof. K. Nachimuthu Institute of Research for Language & Culture (NIRLAC) (பேரா.கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்’) 2007ஆம் ஆண்டு முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனமாகும்.

about

பேரா. கி.நாச்சிமுத்து அவர்கள் கோவை மாவட்டம் கொடுவாய் என்ற ஊரைச் சார்ந்தவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி, பின் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மொழித்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தற்பொழுது திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தமிழ்ப் பணியைத் தமிழ் உலகு அறியும். இந்தியா மட்டுமல்ல ஜெர்மனி, போலந்து நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரிடம் தமிழ் கற்ற மாணவர்கள் இவர் மேல் கொண்ட அன்பின் மிகுதியால் இந்நிறுவனம் கோவையில் தொடங்கப்பட்டது. 

இந்நிறுவனத்தின் வாயிலாக, பேரா. கி.நா. அவர்களின் கட்டுரைகள் ஐந்து நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. ‘கி.நா. தமிழியல்’ என்ற காலாண்டு இதழும் இந்நிறுவனத்தின் மூலம் வெளிவருகின்றது. சித்த மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சுவடிகளைப் படிப்பது பற்றிய பயிலரங்கையும் இந்நிறுவனம் நடத்தியுள்ளது. இந்நிறுவனம் நடத்தும் முதல் கருத்தரங்கு இதுவாகும்.

கருத்தரங்கு குறித்த பொதுவான அறிவிப்புகள்

  • கருத்தரங்கில் கலந்து கொள்வோருக்கு மதிய உணவும் தேநீரும் வழங்கப்படும்.
  • பல்கலைக்கழகம், கல்லூரியில் பணிபுரிகின்ற பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும், தமிழ் பயிலும் முதுகலை, இளங்களை மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
  • மொழி ஆர்வலர்களும் மருத்துவர்களும் கலந்து கொள்ளலாம்.
  • வெளியூரில் இருந்து வருகின்ற பங்கேற்பாளர்களுக்குச் சிறு வசதிகள் செய்து தரப்படும். தங்கள் வரவு குறித்து முன்
    அறிவிப்பு வேண்டும்.

கருத்தரங்க அமைப்புக் குழு

முனைவர் ந. சண்முகம், Ph.D.,
மதிப்புறு தலைவர்
பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்
கோயம்புத்தூர்-641030

முனைவர் மா.ரேணுகா, Ph.D.,
மதிப்புறு ஆலோசகர்
பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்
கோயம்புத்தூர்-641030

திரு செ.அசோக்குமார், M.B.A.,
செயலர்
பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்
கோயம்புத்தூர்-641030
கைபேசி: 94875 64771

திரு சுரேஷ் மனோகரன், B.E.,
பொருளாளர்
பேரா. கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்
கோயம்புத்தூர்-641030

அலுவலகத் தொலைபேசி எண்:
+91 94422 49293
+91 94422 59293
மின்அஞ்சல்:
mailtonirlac@gmail.com
இணையத்தளம்:
www.nirlac.org.in